கோவை ரேஸ்கோர்ஸ் ஸ்கீம் சாலையில் ஆர்ட் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி - 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்பு

ரெட்ரோ ஓவியங்கள், பிச்சுவாய் பெயிண்டிங், கேலிகிராபி, 3டி மாடலிங், காமிக் ஸ்ட்ரிப், குரோச்செட், களிமண் கலை, மட்பாண்டங்கள், மூங்கில் கூடை நெசவு போன்ற பல கலைப் படைப்புகள் நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்தன.


கோவை: கோவை, ரேஸ் கோர்ஸ் ஸ்கிம் சாலையில் இன்று காலை 10 மணி அளவில் ஆர்ட் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்கள் கலைப்படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.



நிகழ்ச்சியில் மணல் ஓவியங்கள், தெய்வீக மற்றும் புராண உருவங்களின் கேரள சுவரோவியங்கள், கையால் செய்யப்பட்ட தலைகீழ் கண்ணாடி கலை போன்ற பல்வேறு வகையான கலைகள், கிரியேட்டிவ் கேலிகிராபி, 3-டி மோல்ட்ஸ் மற்றும், குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர்களின் உருவப்படங்கள் மற்றும் பல காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.



குழந்தைகளுக்கான ஓவிய பயிற்சி பட்டறைகள் நடைபெற்றது.



மேலும் ரெட்ரோ ஓவியங்கள், பிச்சுவாய் பெயிண்டிங், கேலிகிராபி, 3டி மாடலிங், காமிக் ஸ்ட்ரிப், குரோச்செட், களிமண் கலை, மட்பாண்டங்கள், மூங்கில் கூடை நெசவு போன்ற பல கலைப் படைப்புகள் என பல காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...