தாராபுரத்தில் 7000 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

தாராபுரம் பகுதியில் 7000 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகளை வழங்கிய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மக்களின் நலனை காப்பாற்றும் திட்டமாக இதை குறிப்பிட்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பகுதியில், பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் மற்றும் முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்துடன் இணைந்து, ரூபாய் 5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ காப்பீடு அட்டைகளை சுமார் 7000 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது,



தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவம் மற்றும் கல்வி துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக குறிப்பிட்டு, மக்களை தேடி மருத்துவம் மற்றும் இன்னுயிர் காப்போம் 48 போன்ற பல நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என்று தெரிவித்தார்.

மேலும், அமைச்சர் பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...