பாரூக் கொலை வழக்கில் மேலும் மூன்று பேர் கைது, நீதிபதி முன் ஆஜர்!

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த இரும்பு வியாபாரியான 31 வயது இளைஞர் மர்ம நபர்களால் சரமாரியாக கத்தியால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே மூன்று பேர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் மேலும் மூன்று பேரை கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களை நீதிபதி முன் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை உக்கடம் அடுத்த பிலால் எஸ்டேட் பகுதியை  சேர்ந்த அமீது எனபவரது மகன் பாரூக். உக்கடம் பழைய இரும்பு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வரும் பரூக்கிற்கு 3 ஆம் வகுப்பில் பயிலும் மகள் மற்றும் 6ம் வகுப்பில் பயிலும் மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 16ம் தேதி இரவு பணி முடித்து வீட்டிலிருந்த அவருக்கு சுமார் 11.45 மணியளவில் செல்போன் மூலம் அழைப்பு ஒன்று வந்துள்ளது.அதில் பேசிய மர்ம நபர் தொழில் ரீதியாக பேச வேண்டும் எனவும், உக்கடம் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் பண்ணை அருகே வருமாறும் கூறியுள்ளார். 

இதனையடுத்து தனது இரு சக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு வந்த பரூக்கை ஏற்கனவே அங்கு காத்திருந்த மர்ம நபர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் தாக்க துவங்கியுள்ளனர்.அப்போது அங்கிருந்து தப்ப முயன்ற பரூக்கை தங்களிடமிருந்த கத்தியை கொண்டு சரமாரியாக குத்தியும் வெட்டியும் நிலைகுலைய செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.இதனால் பரூக்கின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் வருவதற்குள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பரூக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த உக்கடம் காவல்நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று இரு சக்கர வாகனத்திலும் ஒரு ஆட்டோவிலும் தப்பி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்த வந்த நிலையில் கடந்த 17ம் தேதி அன்ஷாத் என்பவரும் பின்னர் 20 தேதி சதாம் உசேன், சம்சுதீன் என்ற இருவரும் அடுத்தடுத்து நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கடந்த இரண்டு தினங்ளாக ஜாகர், அக்ரம் ஜிந்தா, முகம்மது முனாப் உள்ளிட்ட மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் மூவரும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவரவே  அம்மூவரையும் இன்று கைது செய்து  கோவை 5 வது  குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பாக ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி மூவரையும் வருகிற ஏப்ரல் 5 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.அதனடிப்படையில் அம்மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே கோவையில் கடந்த செப்டம்பர் மாதம் இந்து முன்னனி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டி தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...