திருவள்ளுவர் மற்றும் வள்ளலார் தினங்களில் கோவையில் இறைச்சிக் கடைகள் இயங்கத் தடை

எதிர்வரும் 16.01.2024 அன்று "திருவள்ளுவர் தினம்” மற்றும் 25.01.2024 அன்று “வள்ளலார் தினம்” கொண்டாடப்படுகிறது. அன்றைய தினங்களில் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.


கோவை: திருவள்ளுவர் தினமான 16.01.2024 மற்றும் வள்ளலார் தினமான 25.01.2024 ஆகிய தினங்களில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகள் செயல்படாது மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 16.01.2024 அன்று "திருவள்ளுவர் தினம்” மற்றும் 25.01.2024 அன்று “வள்ளலார் தினம்” கொண்டாடப்படுகிறது. அன்றைய தினங்களில் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடும்படி இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் கோயம்புத்தூர் மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம், சக்திரோடு, போத்தனூர் அறுவைமனைகள் மற்றும் துடியலூர் மாநகராட்சி இறைச்சிக் கடைகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகளால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...