தமிழக அரசுக்கு எதிராக தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தவறிவிட்டதாக கூறி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் கட்சியின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் அண்ணா சிலை அருகே திமுக அரசை கண்டித்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்களை காப்பாற்ற தவறியதாக கூறும் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு சூழலை தமிழக அரசு எச்சரிக்கையுடன் கையாண்டு இருக்க வேண்டும் என்றும், எச்சரிக்கை முன்னேற்பாடு நடவடிக்கைகளை சரியாக எடுத்து இருக்காத அரசை கண்டித்தும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மக்களை காப்பாற்ற தவறிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தது. இந்த நிலையில் தாராபுரம் காவல் நிலையத்தில் அனுமதி பெறாமல் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு வராமல் அர்ஜுன் சம்பத் அவர் வந்த காரில் நிற்காமல் சென்று விட்டார்.



அதன் பிறகு ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட 50க்கும் மேற்பட்ட இந்து மக்கள் கட்சியினரை தாராபுரம் காவல் துறை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையில் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர். இதனால் தாராபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...