சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி வரும் 10ம் தேதி போராட்டம் - திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் பேட்டி

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி நிலைபாடுகள் குறித்து கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி சரியான நேரத்தில் அறிவிப்பார் என மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் ஜாபர் அலி தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் காங்கேயம் சாலை சிடிசி கார்னர் பகுதியில் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சி அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாற்று கட்சிகள் மற்றும் இயக்கங்களில் இருந்து விலகி மனிதநேய ஜனநாயக கட்சியில் மாநில செயலாளர் ஜாபர் அலி முன்னிலையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்துக் கொண்டனர்.



இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட செயலாளராக ராயல் ராஜா என்பவர் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில செயலாளர் ஜாபர் அலி,



இன்றைய தினம் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிமுன் அன்சாரியின் அரசியலால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்து இருப்பதாகவும், வருகின்ற 28ஆம் தேதி பழனி பாபா நினைவு நாளை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் தமிமுன் அன்சாரி முன்னிலையில் தங்களை மனித நேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொள்ள இருப்பதாகவும், அவ்விழா ஒரு மாற்று அரசியலை முன்னெடுக்கும் விழாவாக அமையும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து வருகின்ற 10ஆம் தேதி திருச்சியில் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அனைத்து மதத்தைச் சேர்ந்த சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாகவும், தமிழக அரசு தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை கிணற்றில் போட்ட கல் போல நிறைவேற்றாமல் இருப்பதாகவும், உடனடியாக பாதிக்கப்பட்டு வருபவர்களின் குரலாய் மனிதநேய ஜனநாயக கட்சி நடத்துகின்ற இந்த போராட்டத்திற்கு செவி சாய்த்து 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அனைத்து மதத்தைச் சேர்ந்த சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாக கூறினார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...