கோவை கங்கா இன்ஸ்டிடியூட்டில் செவிலியர் பயிற்சி துவக்க விழா

கோவை துடியலூரில் உள்ள கங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் சயின்ஸில் முதலாம் ஆண்டு செவிலியர் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.


கோவை: கோவை துடியலூரில் உள்ள வட்டமலைபாளையம் பகுதியில் கங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் செவிலியர் பயிற்சியின் துவக்க விழா நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா ஆரம்பமாகி, குத்துவிளக்கு ஏற்றப்பட்டது.



விழாவில் கங்கா மருத்துவமனையின் தலைவர் கனகவள்ளி சண்முகநாதன், கல்லூரி முதல்வர் எஸ்தர் ஜான், முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர். ஏ. கலியமூர்த்தி, திருச்சூர் அன்னை செவிலியர் கல்லூரி முதல்வர் உஷா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செவிலியர்களின் பங்கு குறித்து டாக்டர். ஏ. கலியமூர்த்தி உரையாற்றினார்.



மாணவ, மாணவிகள் விளக்கேற்றி உறுதிமொழி எடுத்தனர். சி.என்.ஓ இக்னேசியஸ் மேரி புளோரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழியை வாசித்தார், 120 செவிலியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



அலைடு ஹெல்த் சயின்ஸ் ஆசிரியர் அகிலாதேவி மாணவ, மாணவிகளுக்கு சத்தியப் பிரமாணம் செய்து வைத்தார். கல்லூரி துணை முதல்வர் ஜெபாகுமாரி நன்றி கூறிய பிறகு, அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

கல்லூரி வளாகத்தில் ஏர் ஆம்புலன்ஸ், செல்பி பயிண்ட்ஸ் அமைக்கப்பட்டு இருந்தன, மேலும் பொங்கல் விழாவும் கொண்டாடப்பட்டது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...