கோவை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவைகள் குறைப்பு

கோவை, சென்னை இடையே இயக்கப்படும் 3 விமானங்கள், கோவை, ஹைதராபாத் இடையே இயக்கப்படும் 2 விமானங்கள் மற்றும் கோவை, பெங்களூர் இடையே இயக்கப்படும் 1 விமானம் ஆகியவற்றின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவை விமான நிலையத்திலிருந்து 27 உள்நாட்டு விமான சேவைகளும், 2 சர்வதேச விமான சேவைகளும் வழங்க முடியும் என்ற நிலையில் சமீப காலமாக விமான சேவைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (DGCA) உத்தரவின்படி தனியார் விமான நிறுவனமான இண்டிகோவின் 30 விமான சேவைகள் நாடு முழுவதும் அண்மையில் நிறுத்தப்பட்டது. இதில் இண்டிகோ கோவைக்கு வழங்கிய 6 சேவைகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

கோவை, சென்னை இடையே இயக்கப்படும் 3 விமானங்கள், கோவை, ஹைதராபாத் இடையே இயக்கப்படும் 2 விமானங்கள் மற்றும் கோவை, பெங்களூர் இடையே இயக்கப்படும் 1 விமானம் ஆகியவற்றின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இம்மாதம் 4 ஆம் தேதி முதல் இந்த சேவை குறைப்பு துவங்கிய நிலையில் இதன் காரணமாக கோவையில் இருந்து இப்பகுதிகளுக்கு விமானம் வழியே செல்வது பயணிகளுக்கு சவாலாக இருக்கிறது. விமான சேவைகளுக்கான டிமாண்ட் அதிகரிக்க டிக்கெட் கட்டணமும் பெருமளவு உயர்ந்திருக்கிறது.

இதனால் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் இந்த உத்தரவை அறிவித்திருக்கிறது என்பது முழுமையாக இன்னும் வெளிவரவில்லை என்றாலும் தகவல்களின்படி இண்டிகோ வைத்துள்ள A320 என்ற வகை விமானங்களில் ஏற்பட்ட சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இந்த விமான சேவைகள் நிறுத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

அதேபோல இண்டிகோ நிறுவனம் தனது A320வகை விமானத்திற்கு மாற்றாக சில இடங்களில் ATR இனம் மற்றொரு வகை விமானத்தை அறிமுகப்படுத்தவும் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இண்டிகோ விமான நிறுவனத்தில் A320 ரக விமானங்களே அதிகம் உள்ளது என்பதும், 2023ல் தனது விமானங்களில் எரிபொருளை 6 கிலோ வரை மிச்சப்படுத்துவதற்காக Flap - 3 landing எனும் அபாயகரமான தரையிறங்கும் முறையை பின்பற்ற தனது பைலட்டுகளுக்கு பரிந்துரைத்து, அதை பின்பற்ற வைத்ததற்காக அந்த நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...