தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழகத்தில் கால்நடைகளுக்கு மரியாதையை செலுத்தும் விதமாக பட்டி பொங்கல் கோலாகலம்

பட்டி பொங்கலை முன்னிட்டு வேளாண் பல்கலையில் உள்ள, பருத்தி, நெல் மற்றும் தோட்டக்கலை துறைகளில் பணிபுரியும் விவசாய பண்ணை தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், ஒவ்வொரு ஆண்டும் பட்டி பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பட்டி பொங்கல் விழாவுக்கு, மாடுகளை ஊர்வலமாக அழைத்து வந்து சூரியனுக்கு படையல் வைத்து பொங்கலை, மாடுகளுக்கும் உணவாக கொடுத்தனர்.



வேளாண் பல்கலையில் உள்ள, பருத்தி, நெல் மற்றும் தோட்டக்கலை துறைகளில் பணிபுரியும் விவசாய பண்ணை தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. கயிறு இழுக்கும் போட்டிகள், சிலம்பாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி அவர்கள் பரிசுகளை வழங்கினார். பின்னர் ஒன்பது திரவியங்கள் நிரப்பப்பட்ட பாத்தியில் பசுமாட்டை மிதிக்க வைத்தனர். இதில் நவதானிய குங்குமம் உள்ள பாத்தியில் பசு கால் வைத்ததால் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழித்து மங்களகரமாக இருக்கும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் துணைவேந்தர் கீதாலட்சுமி கூறும்போது, பட்டி பொங்கல் விழா என்பது உழவர்களுக்கு மட்டுமல்ல, உழவுத் தொழிலோடு சம்பந்தப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் சேர்த்து கொண்டாடப்படும் பொதுவான விழாவாகும் எனவும், வேளாண் மக்கள் உழவுத்தொழில் செய்து அறுவடை செய்த தானியங்களை, இயற்கையின் கடவுளான சூரியனுக்கு படைத்து மகிழ்கின்ற நாளாக, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதில் பட்டி மிதிக்கும் நிகழ்ச்சியில் 9 திரவியங்கள் நிரப்பப்பட்ட பாத்தியில் பசு மாட்டை மிதிக்க வைத்து, எந்த பாத்தியில் மிதிக்கிறதோ அந்த பாத்தியில் உள்ள பொருள் சார்ந்த தானியம் வளம் பெருகும் என்பது ஐதீகம். பாரம்பரியமாக இவ்விழா பல்கலைக்கழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது பண்ணை தொழிலார்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக கூறினார்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....