தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழகத்தில் கால்நடைகளுக்கு மரியாதையை செலுத்தும் விதமாக பட்டி பொங்கல் கோலாகலம்

பட்டி பொங்கலை முன்னிட்டு வேளாண் பல்கலையில் உள்ள, பருத்தி, நெல் மற்றும் தோட்டக்கலை துறைகளில் பணிபுரியும் விவசாய பண்ணை தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், ஒவ்வொரு ஆண்டும் பட்டி பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பட்டி பொங்கல் விழாவுக்கு, மாடுகளை ஊர்வலமாக அழைத்து வந்து சூரியனுக்கு படையல் வைத்து பொங்கலை, மாடுகளுக்கும் உணவாக கொடுத்தனர்.



வேளாண் பல்கலையில் உள்ள, பருத்தி, நெல் மற்றும் தோட்டக்கலை துறைகளில் பணிபுரியும் விவசாய பண்ணை தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. கயிறு இழுக்கும் போட்டிகள், சிலம்பாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி அவர்கள் பரிசுகளை வழங்கினார். பின்னர் ஒன்பது திரவியங்கள் நிரப்பப்பட்ட பாத்தியில் பசுமாட்டை மிதிக்க வைத்தனர். இதில் நவதானிய குங்குமம் உள்ள பாத்தியில் பசு கால் வைத்ததால் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழித்து மங்களகரமாக இருக்கும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் துணைவேந்தர் கீதாலட்சுமி கூறும்போது, பட்டி பொங்கல் விழா என்பது உழவர்களுக்கு மட்டுமல்ல, உழவுத் தொழிலோடு சம்பந்தப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் சேர்த்து கொண்டாடப்படும் பொதுவான விழாவாகும் எனவும், வேளாண் மக்கள் உழவுத்தொழில் செய்து அறுவடை செய்த தானியங்களை, இயற்கையின் கடவுளான சூரியனுக்கு படைத்து மகிழ்கின்ற நாளாக, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதில் பட்டி மிதிக்கும் நிகழ்ச்சியில் 9 திரவியங்கள் நிரப்பப்பட்ட பாத்தியில் பசு மாட்டை மிதிக்க வைத்து, எந்த பாத்தியில் மிதிக்கிறதோ அந்த பாத்தியில் உள்ள பொருள் சார்ந்த தானியம் வளம் பெருகும் என்பது ஐதீகம். பாரம்பரியமாக இவ்விழா பல்கலைக்கழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது பண்ணை தொழிலார்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக கூறினார்.

Newsletter

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...