வால்பாறை அரசு பேருந்து விபத்து: 30 பேர் காயம்

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


Coimbatore: 

வால்பாறை அரசு பேருந்து விபத்து: 30 பேர் காயம்

கோவை, ஜனவரி 17, 2024: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அரசு பேருந்து இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.





வால்பாறை பேருந்து நிலையத்தில் இருந்து வெல்லமலை எஸ்டேட் பகுதிக்கு செல்வகுமார் என்பவர் இயக்கி வந்த பேருந்து, வெல்லமலை எஸ்டேட்டில் இருந்து வால்பாறை நோக்கி ராமகிருஷ்ணன் என்பவர் இயக்கி வந்த பேருந்து ஆகிய இரண்டு பேருந்துகளும் மாலை 5.50 மணியளவில் பெட்ரோல் பங்க் பகுதியில் நேருக்கு நேர் மோதின.

இதில், வெல்லமலை எஸ்டேட்டில் இருந்து வந்த பேருந்து மிகவும் பழமையானது மற்றும் பிரேக் பிடிக்காததால், பேருந்தை நிறுத்துவதற்காக அங்குமிங்கும் சாலையில் இடித்துக் கொண்டு வந்தது. அப்போது, சாலையின் ஓரம் நின்ற டாடா சுமோ மற்றும் இரண்டு சக்கர வாகனத்தை இடித்து, எதிரே வந்த பேருந்தின் மீது மோதியது.

இந்த விபத்தில், இரண்டு பேருந்துகளில் பயணித்த 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்களை 108 மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், படுகாயமடைந்த மூன்று பேரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பொங்கல் விடுமுறை என்பதால், சாலைகளில் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கூட்டம் அலைமோதியது. இந்த சூழ்நிலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...