ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கி இருப்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்ட நடவடிக்கை - த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கி இருப்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்ட நடவடிக்கை எனவும், இந்த இடைத்தேர்தல் சவாலான தேர்தலாகவும், சுவராஷ்யமான தேர்தலாகவும் இருக்கும் எனவும் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொள்ள வந்த அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது  உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து ஆலோசனை நடத்த மாவட்டம் தோறும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு விரைவாக நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு நிறைய இடங்களை வெல்ல வேண்டும் என்பதே தங்களது விருப்பம் எனவும் அதே வேளையில் ஓருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி  அமைக்கவும் வாய்பிருக்கின்றது எனவும் தெரிவித்தார். மேலும் தமிழக அரசு பெட்ரோல், டீசலுக்கு வாட்வரியை உயர்த்தி இருப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் உடனடியாக உயர்த்தப்பட்ட வாட் வரியை  திரும்ப பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். பவானி ஆற்றின்  குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் விவகாரத்தில்  மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த அவர் மத்திய அரசு இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு  கட்டப்பட்ட தடுப்பணைகளை அகற்ற வேண்டும்  என தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கி இருப்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்ட நடவடிக்கை என்று தெரித்த அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சவாலான தேர்தலாகவும், சுவராஷ்யமான தேர்தலாகவும் இருக்கும் எனவும் தெரிவித்தார். இனிமேல் வருகின்ற பொதுத்தேர்தல்களில் பெரும்பான்மை எந்த அரசியல் கட்சிக்கும் இருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானமானது சபையில் இருக்கும் உறுப்பினர்களை பொறுத்து அமையும் எனவும் ஜி.கே.வாசன் தெரித்தார். மேலு, இனிமேல் தன்னுடைய கூட்டங்கள் பட்டாசு வெடித்தல், சால்வை, பொன்னாடை அணிவித்தல் போன்றவற்றை தவிர்க்குமாறு தொண்டர்களுக்கு வலியுறுத்தி இருப்பதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...