குருகோபிந் சிங் பிறந்த நாள் விழா மத நல்லிணக்க விழாவாக கோவையில் கொண்டாட்டம்

மத நல்லிணக்க விழாவில், குருகோபிந் சிங் அவர்களின் நினைவாக கலை கலச்சார நிகழ்வுகள் நடைபெற்றன. குழந்தைகளின் நிகழ்ச்சியாக பஜனை பாடல்கள் பாடப்பட்டன. அதனைத்தொடர்ந்து அனைத்து மதத்தினரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர்.


கோவை: சீக்கியர்களின் புனித அக்மாத குருவான பத்தாவது மதகுரு, குருகோபிந் சிங் அவர்களின் பிறந்தநாள் விழா, சமய சமூக நல்லிணக்க விழாவாக கோவையில் உள்ள குருவாரா சிங் சபாவில் சிறப்பாக நடைபெற்றது.



குருத்வாராவின் தலைவர், செயலாளர் ஆகியோரின் அழைப்பின் பேரில், சர்வ மத தலைவர்கள், பல் சமய அறிஞர்கள், அரசு உயர் அதிகாரிகள், மில்ட்ரி அதிகாரிகள், கோவை மாவட்ட மேஜிஸ்ட்ரேட் அருணாச்சலம், அப்துல் அக்கீம், முகமது அக்கீம், பேராசிரியர் காதர் மொய்தீன், முஜ்ஜின் ரகுமான் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.



இந்த விழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இறுதி குருவான குருகோபிந் சிங் அவர்களின் நினைவாக கலை கலச்சார நிகழ்வுகள் நடைபெற்றன.



குழந்தைகளின் நிகழ்ச்சியாக பஜனை பாடல்கள் பாடப்பட்டன. அதனைத்தொடர்ந்து அனைத்து மதத்தினரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர். கோவை மாநகரில் இந்தவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவினை, குருத்வாராவின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.



இந்தநிகழ்வில், தொல் சமய நல்லுறவு இயக்கத்தினர் கலந்துகொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...