தாராபுரத்தில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்தநாளைமுன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு அதிமுகவினர், திருப்பூர் புறநகர் மாவட்ட நகர செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107.வது பிறந்தநாள் விழா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அண்ணாசிலை அருகில் எம்.ஜி.ஆர் திருவுருவப்படத்திற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட நகர செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட கழக பொருளாளர் சின்னப்பன் (எ) பழனிச்சாமி முன்னிலையில் வடக்கு தெரு காமராஜபுரத்திலிருந்து தாரை தப்பட்டை இசை முழக்கத்துடன் உற்சாகமாக பேரணியாக சின்னக் கடைவீதி கடைவீதி பூக்கடை மொக்கை சந்திப்பு வழியாக பழைய நகராட்சி வளாகம் முன்பு எம்.ஜி.ஆர். திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர் அங்கு அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது.



இதேபோன்று தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 107 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் பங்க்கு மகேஷ் தலைமையில் தேவேந்திர தெருவில் எம்.ஜி.ஆரின் 10 ஆடி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



இதன் தொடர்ச்சியாக 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



இதில் அதிமுக கட்சியின் நிர்வாகிகள் இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை அணியினர், மகளிர் அணியினர் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...