ராமர் கோவில் என்பது சாமானிய மக்களின் 500 ஆண்டு போராட்டத்தின் வெற்றி – வீடியோவில் சத்குரு பேச்சு

ராமர் கோவில் திறக்கப்படும் நிகழ்ச்சி நம் நாட்டின் ஒரு மகத்தான நிகழ்ச்சியாகும். கலாச்சார ரீதியாகவும் இது மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த விழா ஆகும். 6,000, 7,000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ராமர் இப்போதும் நம்முடைய சமகால வாழ்க்கைக்கு தேவைப்படுகிறார் என்று சத்குரு பேசியுள்ளார்.


கோவை: அயோத்தியில் திறக்கப்பட உள்ள ராமர் கோவிலானது சாமானிய மக்களின் 500 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என சத்குரு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியுள்ள வீடியோவில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக சாமானிய மக்கள் கடந்த 500 ஆண்டுகளாக போராடி வந்துள்ளனர். ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு எப்பாடுபட்டாவது கோவில் கட்டிவிட வேண்டும் என்ற சாமானிய மக்களின் 500 ஆண்டு கால மன உறுதிக்கு இப்போது வெற்றி கிடைத்துள்ளது.

ராமர் கோவில் திறக்கப்படும் நிகழ்ச்சி நம் நாட்டின் ஒரு மகத்தான நிகழ்ச்சியாகும். கலாச்சார ரீதியாகவும் இது மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த விழா ஆகும். 6,000, 7,000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ராமர் இப்போதும் நம்முடைய சமகால வாழ்க்கைக்கு தேவைப்படுகிறார். ஏனென்றால், ராமருடைய வாழ்க்கை என்பது ஒரு தொடர் தோல்விகளை கொண்டது. குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் ராமர் தனது அரச பதவியையும், ராஜியத்தையும் துறந்தார்.

வன வாசத்தில் இருக்கும் போது அவருடைய பிரியமான மனைவியையும் அவர் இழக்க நேரிட்டது. பின்னர் போர் புரிந்து கடத்தப்பட்ட தனது பிரியமான மனைவியை மீட்டு வந்தார். அதன் பிறகும் சில காரணங்களால் அவரது மனைவியை மீண்டும் காட்டிற்கு அனுப்ப வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. ராமர் தனது குழந்தைகளை கூட பார்க்க முடியவில்லை. இப்படி எண்ணற்ற சவால்களை ராமர் தனது வாழ்வில் சந்தித்தார்.

ஆனால், எந்த சூழலிலும் ராமர் தனது சமநிலையை இழக்கவில்லை. எத்தகைய துன்பமான நிகழ்வுகள் நடந்த போதும் அவர் கோபம் கொள்ளவோ, வெறுப்படையவோ இல்லை. மற்றவர்களை பழிவாங்கவும் எண்ணவில்லை. அதற்கு பதிலாக, தனது எதிரியை கொலை செய்ததற்காக இமயமலைக்கு சென்று ஒரு வருடம் பிராயச்சித்தம் மேற்கொண்டார். இவற்றையெல்லாம் தாண்டி, தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் மக்கள் நன்மைக்கு எது தேவையோ, அதை மட்டுமே ராமர் செய்தார்.

இந்த தன்மை தான் இப்போது நம் நாட்டிற்கும் உலகிற்கும் தேவை. நமக்கு தலைவர்களாக இருப்பவர்கள் ராமரை போல் இருக்க வேண்டும். சொந்த குடும்பத்தை தாண்டி ஒவ்வொரு குடி மக்களின் நன்மைக்காகவும் செயல் புரியும் தலைவர்கள் நம் உலகிற்கு தேவை. இது சாத்தியமானால் அன்பான, அமைதியான மற்றும் ஆனந்தமான உலகை நம்மால் உருவாக்க முடியும். எனவே, ராமருக்கு பூஜை செய்வதுடன் சேர்த்து அவருடைய தன்மையையும் நமக்குள் வளர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...