கோவை கலிக்கநாயக்கன்பாளையத்தில் லஞ்சம் வாங்கிய காவலர் ஆயுதப் படைக்கு மாற்றம்

பொங்கல் விழாவில் பாதுகாப்புப் பணியில் இருந்த தொண்டாமுத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் மணிகண்டன் என்பவா் மேடையில் இருந்த ஒருவரை அழைத்து விழாவின் பாதுகாப்புக்கு வந்துள்ள தனக்கு ரூ.1,000 வழங்க வேண்டும் என்று கேட்டு வாங்கியதால், அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


கோவை: கோவை கலிக்கநாயக்கன்பாளையத்தில் அப்பகுதி மக்கள் சார்பில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு பொங்கல் விழா மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தொண்டாமுத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலா் மணிகண்டன் என்பவா் மேடையில் இருந்த ஒருவரை அழைத்து விழாவின் பாதுகாப்புக்கு வந்துள்ள தனக்கு ரூ.1,000 வழங்க வேண்டும் என்று கேட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, காவலா் மணிகண்டன் கேட்ட ரூ.1,000ஐ பொதுமக்கள் வழங்கினா். இதை அங்கிருந்த ஒருவா் கைப்பேசியில் விடியோ எடுத்துள்ளார். இதைத் தொடா்ந்து, மணிகண்டன் லஞ்சம் வாங்கிய விடியோ ஆதாரங்களுடன் அப்பகுதி மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை நேற்று (ஜன.20) புகார் மனு அளித்தனர்.

அப்போது, அங்கிருந்த காவல் துறை அதிகாரிகள், தலைமைக் காவலர் மணிகண்டனை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து ஏற்கெனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறினர். அவா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்களிடமிருந்த விடியோ ஆதாரத்தை போலீஸாரிடம் வழங்கிவிட்டுச் சென்றனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...