ஐந்தாவது வாரமாக கோவை மாநகராட்சியின் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெறுமா என்று மக்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் நிர்வாக காரணத்தால், குறை தீர்க்கும் நாள் கூட்டம் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நாளையும் நடைபெறாது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பொது பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.

கடைசியாக 2023-டிசம்பர் 12ம் தேதி இந்த கூட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து வந்த 4 செவ்வாய்க்கிழமைகளில் (19.12.23, 26.12.23, 2.01.24, 9.01.24) இந்த கூட்டம் நிர்வாக காரணங்களால் நடைபெறவில்லை. அதன் பின்னர் 15.1.2024 பொங்கல் பண்டிகை என்பதால் அரசு விடுமுறை அன்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாளை (23.1.24) இந்த கூட்டம் நடைபெறுமா என்று மக்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் நிர்வாக காரணத்தால் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நாளையும் நடைபெறாது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் விடுமுறை தவிர்த்து பார்த்தல் தொடர்ந்து 5 வாரமாக இந்த கூட்டங்கள் நடைபெறாமல் உள்ளது. வழக்கமாக இந்த கூட்டங்களை மேயர் கல்பனா தலைமை தங்குவார். அவர் இல்லையென்றால், துணை மேயர் வெற்றி செல்வன் தலைமை தங்குவார். அவரும் இல்லாத சமயங்களில் மாநகராட்சி ஆணையர், துணை ஆணையர்கள் இந்த கூட்டத்தில் மக்கள் குறைகளை கேட்பார்கள். ஆனால் தொடர்ந்து 5 முறை கூட்டம் நடைபெறாமல் உள்ளது புதிதாக உள்ளது. ஒவ்வொரு வாரமும் குறைந்தது சுமார் 30 கோரிக்கை மனுக்களாவது மக்களிடம் இருந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...