சின்னியகவுண்டம்பாளையத்தில் போர்ஜரி போக்குவரத்தில் ஈடுபட்ட லாரி ஓனர்- விபத்தால் ஏற்பட்ட விபரீதம்

விபத்தில் சிக்கிய லாரியின் எண்ணும், அங்குவந்த மற்றொரு லாரியின் எண்ணும் ஒரே மாதிரியாக இருப்பதை பார்த்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த பல்லடம் போலீசார் இரண்டு லாரிகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செட்டிபாளையம் சாலையில் உள்ள சின்னியகவுண்டம்பாளையம் பகுதியில் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி இரும்பு கம்பெனி கருமண்ணை ஏற்றுக் கொண்டு சென்ற லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிகாலையில் பள்ளத்தில் இறங்கியது.

அப்போது இதை அறிந்த லாரி உரிமையாளரான பல்லடம் பகுதியை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவர் மற்றொரு லாரியுடன் சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது அதே எண் கொண்ட ஓனர் எடுத்து வந்த லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு அவர் இறங்கி விபத்தை பார்த்த போது இதனை கண்ட அப்பகுதி மக்கள் இந்த ஒரே எண்ணில் இரண்டு லாரிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து அதை தொடர்ந்து இரண்டு லாரிகளையும் கைப்பற்றிய பல்லடம் போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த லாரியை திண்டுக்கல்லை சேர்ந்த அந்தோணி திரவியம் ஆரோக்கியம் என்ற 33 வயது நபர் ஓட்டி வந்தது குறிப்பிடத்தக்கது. சாலையோர பள்ளத்தில் இறங்கியதால் யாருக்கும் எவ்வித பாதிப்பு இன்றி இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...