குடியரசு தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் ஆகிய இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.


கோவை: நாட்டின் 75வது குடியரசு தின விழா நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகரில் குடியரசு தின விழா நடைபெற உள்ள வ.உ.சி மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.



மேலும், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் ஆகிய இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.



இதனையடுத்து முக்கியமான இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...