தாராபுரம்_பழனி சாலையில் உள்ள ஆலங்காட்டு பிரிவில் ஏற்பட்ட விபத்தில் சித்தர் சமாதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய 8 பேர் காயம்

இனோவா கார் ஒன்று பழனியில் இருந்து தாராபுரம் நோக்கி அதி வேகமாக வந்து ட்ராவலர் வாகனத்தை ஓவர் டேக் எடுத்து சென்றது. இதனால் திடீரென வேனில் முன் பகுதியில் வந்த இனோவா காரின் மேல் மோதல் இருக்க ட்ராவலர் டிரைவர் பிரேக் அடிக்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த ட்ராவலர் சாலையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.


திருப்பூர்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவுக்கு உட்பட்ட கணக்கம்பட்டியில் சித்தர் சமாதி உள்ளது. இங்கு அவரது பக்தர்கள் ஆலயம் அமைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் அங்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் குமாரபாளையம் தேவூர் கிராமத்திலிருந்து 19 பேர் ஆன்மீக சுற்றுலா செல்வதற்காக நேற்று இரவு கணக்கம்பட்டிக்கு வந்தனர்.

அங்கு சித்தர் சமாதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று பழனி_தாராபுரம் சாலையில் 407-ட்ராவலர் வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது தாராபுரம்_பழனி சாலையில் உள்ள ஆலங்காட்டு பிரிவு என்ற இடத்தில் வேன் வந்து கொண்டிருந்தது அப்போது இனோவா கார் ஒன்று பழனியில் இருந்து தாராபுரம் நோக்கி அதி வேகமாக வந்து ட்ராவலர் வாகனத்தை ஓவர் டேக் எடுத்து சென்றது.



இதனால் திடீரென வேனில் முன் பகுதியில் வந்த இனோவா காரின் மேல் மோதல் இருக்க 407 ட்ராவலர் டிரைவர் சரவணன் (33) பிரேக் அடிக்க கட்டுப்பாட்டை இழந்த ட்ராவலர் சாலையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.



இதில் பயணித்த 19 பேரில் அஜித்குமார், மங்கமாள், செல்வராஜ், குப்பாய், அன்புராஜ், உட்பட 8 பேர் காயமடைந்தனர். அவர்களை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துவரப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...