தி.மு.க ஆட்சியில் பத்திரிகையாளர் உயிருக்கே அச்சுறுத்தல் - பா.ஜ.க தேசிய மகளிர் தலைவி வானதி சீனிவாசன் கண்டனம்

சமூக விரோதிகளால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் அளித்தும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளது. பத்திரிகையாளர் ஒருவரின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் வகையில் தான் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை உள்ளது என சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்த, 'நியூஸ் 7 தமிழ்' செய்தி தொலைக்காட்சியின் செய்தியாளர் நேசபிரபு என்பவர் நேற்று இரவு (ஜனவரி 24) அவரது வீட்டுக்கு அருகிலேயே சமூக விரோத கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. பல்லடம் பகுதியில் நடக்கும் சமூக விரோதச் செயல்களை தனது செய்திகள் மூலம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்ததால் நேசபிரபு தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமூக விரோதிகளால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் அளித்தும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளது. பத்திரிகையாளர் ஒருவரின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் வகையில் தான் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை உள்ளது. திமுக அரசை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டால் நள்ளிரவில் பெரும் படையுடன் வீட்டு சுவர் ஏறி கைது செய்கிறது காவல் துறை.

ஆனால், கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமைகள், கனிமவள கொள்ளை என கொடிய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை காவல் துறை கண்டுகொள்வதில்லை. இதற்கு திமுகவினரால் காவல் துறையினர் கைகள் கட்டப்பட்டிருப்பதே காரணம். எனவே, நேசபிரபுவை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். நேசபிரபுவுக்கு தமிழ்நாடு அரசு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...