மாநில செம்மொழிகளுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம்-பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் புகார்

இந்தியாவில் சமஸ்கிருதம் மொழி பேசக் கூடியவர்கள் 24ஆயிரத்து 891 பேர் என பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 649 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் 30 கோடி பேர் பேசக்கூடிய தமிழ் உள்ளிட்ட 5 செம்மொழிகளுக்கு வெறும் 29 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளது என பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை தெற்கு மாவட்ட திமுக மற்றும் மாணவரணி சார்பில் பொள்ளாச்சி பிளாக் மாரியம்மன் கோவில் ஜீவா திடலில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில இணை செயலாளர் மருத்துவர் மகேந்திரன், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.



கூட்டத்துக்கு பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, மத்திய அரசு மாநில மொழிகளுக்கு துரோகம் இழைத்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் செம்மொழிகளாக கருதப்படும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா, சமஸ்கிருதம் போன்ற மொழிகள் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தொகையை ஒதுக்கி உள்ளது.

இந்தியாவில் சமஸ்கிருதம் மொழி பேசக் கூடியவர்கள் 24ஆயிரத்து 891 பேர் என பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 649 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் 30 கோடி பேர் பேசக்கூடிய தமிழ் உள்ளிட்ட 5 செம்மொழிகளுக்கு வெறும் 29 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மாநிலங்களை முடக்குவதற்கும், மாநில மொழிகளை முடக்கும் செயல் என வெட்ட வெளிச்சமாக தெரிகிறது என குற்றம் சாட்டினார்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...