நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாராபுரத்தில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

செய்தியாளர் நேச பிரபுவின் மருத்துவச் செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அலட்சியமாக செயல்பட்ட காவல் துறை அதிகாரிகளை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செய்தியாளர்கள் கேட்டுக்கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டபட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தாராபுரம் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்கள் சார்பில் அண்ணா சிலை முன்பு காவல்துறையினரை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, செய்தியாளர் நேச பிரபுவின் மருத்துவச் செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்திட வேண்டும். அலட்சியமாக செயல்பட்ட காவல் துறை அதிகாரிகளை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும். கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட மர்ம கும்பலில் உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும்.



அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில் தாராபுரம், குண்டடம், மூலனூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் பத்திரிக்கை செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...