பொள்ளாச்சியில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு 74 அடி உயர கொடி கம்பத்தில் தேசிய கொடியேற்றம்

சுதந்திரத்திற்காக போராடிய வீரர்கள், தலைவர்கள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காந்தியடிகள், நேரு, வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகுமுத்துக்கோன், ஜான்சி ராணி லட்சுமி பாய் உட்பட 90 சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


கோவை: நாட்டின் 75 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாக நேற்று கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பகுதியாக பொள்ளாச்சி நகர திமுக சார்பில் 9வது வார்டுக்கு உட்பட்ட சுப்பையா நகர் மைதானத்தில் 75 ஆவது குடியரசு தினவிழாவை முன்னிட்டு 74 அடி உயரம் கொடிக்கம்பம் நடப்பட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது.

மேலும் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகர திமுக செயலாளர் நவநீதி கிருஷ்ணன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் மூவர்ண பலூன்களை வானில் பறக்க விடப்பட்டனர். அதனை தொடர்ந்து சுதந்திரத்திற்காக போராடிய வீரர்கள், தலைவர்கள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காந்தியடிகள், நேரு, வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகுமுத்துக்கோன், ஜான்சி ராணி லட்சுமி பாய் உள்ளிட்ட 90 சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...