கோவையில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே நாளில் இரண்டு கூலி தொழிலாளர்கள் பலி

மேட்டுப்பாளையம் ரோடு இடையர்பாளையம் ஜங்சன் அருகே நடந்த சாலை விபத்தில் ராஜசேகரன் என்ற கூலித்தொழிலாளியும், உக்கடம் பைபாஸ் ரோடு சேத்துமாவாய்க்கால் அருகே நிகழ்ந்த விபத்தில் மணிகண்டனம் என்ற மற்றொரு கூலித்தொழிலாளியும் உயிரிழந்தனர்.


கோவை: கோவை கோவில்மேடு நெசவாளர் காலனியை சேர்ந்தவர் ராஜசேகரன்(63). கூலி தொழிலாளி. இவர் (ஜன.25) மேட்டுப்பாளையம் ரோடு இடையர்பாளையம் ஜங்சன் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக ராஜசேகரன் மீது மோதியது. இதில் லாரி ஏறி அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல கோவை கெம்பட்டி காலனி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் மணிகண்டன்(30). கூலி தொழிலாளி. இவர் (ஜன.25) மொபட்டில் சென்று கொண்டிருந்தார். உக்கடம் பைபாஸ் ரோடு சேத்துமாவாய்க்கால் அருகே சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி சாலையோரம் இருந்த சுவற்றில் மோதினார்.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் இதுகுறித்து கோவை மேற்கு போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Newsletter

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...