கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அனைத்து வாகனப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் அவிநாசி சாலையை பயன்படுத்த மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


Coimbatore: கோவை உப்பிலிப்பாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை நீண்டுள்ள ஜிடி உயர்மட்ட மேம்பாலத்தில் அதிவேக வாகன ஓட்டம் தொடர்பான புகார்களை தொடர்ந்து, AI கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், இன்று மற்றும் நாளை இரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.




கோவை ஜிடி உயர்மட்ட மேம்பாலத்தில் இளைஞர்கள் சிலர் அதிவேகமாக வாகனங்களை ஓட்டி விபத்தில் சிக்குவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, முக்கிய மேம்பாலங்களை இரவு நேரங்களில் மூட போலீசார் முதலில் முடிவெடுத்தனர். ஆனால், முன்கூட்டியே மேம்பாலங்கள் பேரிகேடுகளால் அடைக்கப்பட்டதால் மாநகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானதால், இந்த திட்டத்தை போலீசார் கைவிட்டனர்.




அதிவேகமாக பயணிக்கும் வாகனங்களை கண்காணித்து AI கேமராக்கள் மூலம் அபராதம் விதிக்கும் திட்டம் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. சோதனை அடிப்படையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. தற்போது மீண்டும் கேமராக்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.




இந்நிலையில், இன்று (25ம் தேதி) மற்றும் நாளை (26ம் தேதி) ஆகிய இரு நாட்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால், ஜிடி உயர்மட்ட மேம்பாலத்தில் இரவு 10 மணி முதل் காலை 6 மணி வரை அனைத்து வகையான வாகனப் போக்குவரத்துகளும் முற்றிலுமாக தடை செய்யப்படுகின்றன.




எனவே, இரண்டு நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும் வாகன ஓட்டிகள் ஜிடி உயர்மட்ட மேம்பாலத்தை பயன்படுத்தாமல், மாற்று வழியாக அவிநாசி சாலையை பயன்படுத்துமாறு கோவை மாநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை கவனத்தில் கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...