கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அனைத்து வாகனப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் அவிநாசி சாலையை பயன்படுத்த மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


Coimbatore: கோவை உப்பிலிப்பாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை நீண்டுள்ள ஜிடி உயர்மட்ட மேம்பாலத்தில் அதிவேக வாகன ஓட்டம் தொடர்பான புகார்களை தொடர்ந்து, AI கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், இன்று மற்றும் நாளை இரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.




கோவை ஜிடி உயர்மட்ட மேம்பாலத்தில் இளைஞர்கள் சிலர் அதிவேகமாக வாகனங்களை ஓட்டி விபத்தில் சிக்குவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, முக்கிய மேம்பாலங்களை இரவு நேரங்களில் மூட போலீசார் முதலில் முடிவெடுத்தனர். ஆனால், முன்கூட்டியே மேம்பாலங்கள் பேரிகேடுகளால் அடைக்கப்பட்டதால் மாநகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானதால், இந்த திட்டத்தை போலீசார் கைவிட்டனர்.




அதிவேகமாக பயணிக்கும் வாகனங்களை கண்காணித்து AI கேமராக்கள் மூலம் அபராதம் விதிக்கும் திட்டம் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. சோதனை அடிப்படையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. தற்போது மீண்டும் கேமராக்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.




இந்நிலையில், இன்று (25ம் தேதி) மற்றும் நாளை (26ம் தேதி) ஆகிய இரு நாட்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால், ஜிடி உயர்மட்ட மேம்பாலத்தில் இரவு 10 மணி முதل் காலை 6 மணி வரை அனைத்து வகையான வாகனப் போக்குவரத்துகளும் முற்றிலுமாக தடை செய்யப்படுகின்றன.




எனவே, இரண்டு நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும் வாகன ஓட்டிகள் ஜிடி உயர்மட்ட மேம்பாலத்தை பயன்படுத்தாமல், மாற்று வழியாக அவிநாசி சாலையை பயன்படுத்துமாறு கோவை மாநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை கவனத்தில் கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...