திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் உறுதி - விவசாயிகள் போராட்டம் முடிவு

தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் செந்திலரசன் தலைமையில் வருவாய் துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை மற்றும் விவசாயிகள் ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து பிஏபி திட்டத்தில் உபரி நீரை திறந்து விட வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அர்ஜுனன் மற்றும் நிர்வாக உறுப்பினர் சிவக்குமார் தலைமையில் பலகட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.



போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.



இந்த நிலையில் வருவாய் துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை மற்றும் விவசாயிகள் ஆகியோர் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் செந்திலரசன் தலைமையில் பொதுப்பணித்துறை உடுமலை பொள்ளாச்சி கோட்ட பொறியாளர் மகேந்திரன் மற்றும் தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன், தாராபுரம் குண்டடம் காவல் ஆய்வாளர் அருள் மற்றும் திருப்பூர் ஒப்பாரி பாசன சங்க விவசாயிகள் சங்க நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார், துணைத் தலைவர் குணசேகரன் ஆகியோர் நடத்திய முத்தரப்பு பேச்சு வார்த்தையில் திருமூர்த்தி அணையில் இருந்து அணைக்கு தண்ணீர் வழங்குவதாக உள்ளதாகவும் உப்பாறு அணைக்கு திறந்து விடுவதாக அதிகாரிகள் கொடுத்து வாக்குறுதியை அடுத்து பாசன விவசாயிகள் ஏற்றுக் கொண்டனர்.



இதனை தொடர்ந்து போராட்டத்தை விவசாயிகள் தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...