தேசிய அளவிலான கேலோ இந்தியா களரி பயட்டு விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற மாணவருக்கு உடுமலையில் உற்சாக வரவேற்பு

உடுமலை ஆர்.கே.ஆர் கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு பயிலும் மாணவர் சுர்ஜித் கேலோ இந்தியா களரி பயட்டு போட்டியில் சுவடுகள் பிரிவில் கலந்துகொண்டு, வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.


திருப்பூர்: தேசிய அளவிலான கேலோ இந்தியா களறிபயட்டு மற்றும் விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.



இதில் தமிழகம், கேரளம், புதுச்சேரி, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், டெல்லி, ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உட்பட 16 மாநிலச் சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.



இதில் உடுமலை ஆர்.கே.ஆர் கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு பயிலும் மாணவர் சுர்ஜித் கலந்து கொண்டு கேலோ இந்தியா களரி பயட்டு போட்டியில் சுவடுகள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.



இந்த நிலையில் பள்ளியின் சார்பில் பேண்டு வாத்தியங்கள் முழங்க மாணவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



களரி போட்டியில் தமிழகத்தில் வெள்ளி பதக்கம் வென்ற ஒரே மாணவர் சுர்ஜித் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஏற்கனவே 2021 ஹரியாணை மாநிலத்தில் நடைபெற்ற கேலோ போட்டியில் தங்கப் பதக்கமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. களரி பயட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவரை உடுமலை ஆர்.கே.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.கே. ராமசாமி, செயலாளர் ஆர்.கே.ஆர். கார்த்திக் குமார், பள்ளி முதல்வர் டி.மாலா பயிற்று வித்த சிலம்பம் மற்றும்‌ களறி பயட்டு ஆசான் வீரமணி மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் பயிற்சியாளர் வீரமணி கூறும் பொழுது, தமிழகத்தில் தற்சமயம் களரி போட்டியில் விளையாடுவதற்கு பலர் ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்த வேண்டும். மேலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மற்ற மாநிலங்களில் வழங்குவது போல வெற்றி பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...