காங்கேயம் நகர்மன்ற கூட்டத்தில் 47 தீர்மானங்கள் நிறைவேற்றம்

காங்கேயம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக மூன்று நிறுவனங்களிடம் இருந்து நிலவேம்பு குடிநீர் வழங்கிட விலைப்புள்ளி கோரப்பட்டதில் குறைவான விலைப் புள்ளியினை ஏற்று விநியோக உத்தரவு வழங்க அனுமதி கோரி நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


திருப்பூர்: காங்கேயம் நகராட்சி அலுவலகத்திலுள்ள நகர்மன்ற கூட்டத்தில் காங்கேயம் நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் ந.சூரியப்பிரகாஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கமலவேணி, நகராட்சி ஆணையர் கனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காங்கேயம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக மூன்று நிறுவனங்களிடம் இருந்து நிலவேம்பு குடிநீர் வழங்கிட விலைப்புள்ளி கோரப்பட்டதில் குறைவான விலைப் புள்ளியினை ஏற்று விநியோக உத்தரவு வழங்க அனுமதி, நகராட்சிக்கு சொந்தமான இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் குத்தகை உரிமத்தினை புது ஏல ஒப்பந்தப்பள்ளி கோரப்பட்டத்தில் வரப்பெற்ற ஒப்பந்த புள்ளிகளை ஒப்பிட்டு கூடுதலாக இருக்கும் ஒப்பந்த புள்ளியினை ஏற்று குத்தகைக்கு விட அனுமதி, குடியிருப்பு பகுதிகளில் சாலை ஓரங்களில் உள்ள செடி, கொடி, முட்புதர்களில் களைக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிக்காக ஆகும் செலவு தொகையினை பொது நிதியிலிருந்து மேற்கொள்ள மன்றத்தின் அனுமதி, தூய்மை இந்தியா திட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை கிடங்கில் குப்பைகளை அரைக்கும் இயந்திரம் பழுதடைந்த நிலையில் பழுது பார்க்கும் செலவிற்கு மன்றத்தின் அனுமதி, அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர்க் குழாய்கள் அமைக்கும் பணிக்கு ஆகும் செலவு தொகைக்கான மன்றத்தின் அனுமதி உட்பட சுமார் 47 கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில் அனைத்தும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் பொது இடங்களில் கொட்டப்படும் குப்பைகளை சேகரிக்கும் பணி குறித்தும், குடிநீர் குழாய்கள் உடைப்பு மற்றும் சரிசெய்வது குறித்தும், சிவன்மலை ஊராட்சி, பொத்தியம்பாளையம் ஊராட்சி மற்றும் ஆலம்பாடி ஊராட்சி ஆகிய மூன்று கிராம ஊராட்சிகளையும் ஒருங்கிணைத்து எல்லை விரிவாக்கம் செய்வது குறித்தும், இதனால் ஏற்படக்கூடிய நன்மைகளும், வருவாய் அதிகரிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து காங்கேயம் நகராட்சியின் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் காங்கேயம் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...