கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட துவக்க விழா

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு வைக்கபட்டிருந்த அரிசி, பருப்பு ஆகியவற்றின் தரம் குறித்து அவர் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் இன்று (பிப்.01) உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் மோ.ஷர்மிளா, கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஸ்வேதா சுமன் ஆகியோர் இருந்தனர். பின்னர் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அங்குள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அப்பொழுது அங்கு வைக்க பட்டுள்ள அரிசி, பருப்புகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது அரசு பேருந்துகளின் தரம், அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, ஓட்டுநர், நடத்துனர்களிடம் ஏதேனும் குறைகள் உள்ளதா என கேட்டறிந்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...