பட்டியலின மாணவியை வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொள்ளாச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னையில் பட்டியலின மாணவியை வன்கொடுமை செய்த நபரை கைது செய்திருப்பது வெறும் நாடகம் என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற கொறடா எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டார்.


கோவை: சென்னையில் பட்டியலின மனைவியை வன்கொடுமை செய்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் பகுதியில் கோவை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



எதிர்க்கட்சி சட்டமன்ற கொறடாவும், கோவை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை, வால்பாறை பகுதிகளை சேர்ந்த அதிமுகவினர் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டியலின மாணவியை வன்கொடுமை செய்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, சென்னையில் பட்டியலின மாணவியை வன்கொடுமை செய்த நபரை கைது செய்திருப்பது வெறும் நாடகம் என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

திமுக ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டு திமுக அரசு எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. கடுமையான மின் கட்டணம் உயர்வால் தொழில் நிறுவனங்களும், விசைத்தறி தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு திட்டமிட்டு செயல்படுத்தாமல் இருக்கிறது. நடைபெற இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும். இதே போல் தமிழகத்தில் எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் 200 தொகுதிக்கு மேல் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆவார் என்று எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தாமோதரன், கந்தசாமி, அமுல் கந்தசாமி மற்றும் பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...