பட்டியலின மாணவியை வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொள்ளாச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னையில் பட்டியலின மாணவியை வன்கொடுமை செய்த நபரை கைது செய்திருப்பது வெறும் நாடகம் என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற கொறடா எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டார்.


கோவை: சென்னையில் பட்டியலின மனைவியை வன்கொடுமை செய்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் பகுதியில் கோவை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



எதிர்க்கட்சி சட்டமன்ற கொறடாவும், கோவை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை, வால்பாறை பகுதிகளை சேர்ந்த அதிமுகவினர் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டியலின மாணவியை வன்கொடுமை செய்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, சென்னையில் பட்டியலின மாணவியை வன்கொடுமை செய்த நபரை கைது செய்திருப்பது வெறும் நாடகம் என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

திமுக ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டு திமுக அரசு எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. கடுமையான மின் கட்டணம் உயர்வால் தொழில் நிறுவனங்களும், விசைத்தறி தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு திட்டமிட்டு செயல்படுத்தாமல் இருக்கிறது. நடைபெற இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும். இதே போல் தமிழகத்தில் எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் 200 தொகுதிக்கு மேல் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆவார் என்று எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தாமோதரன், கந்தசாமி, அமுல் கந்தசாமி மற்றும் பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...