குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்த முதல்வருக்கு கு.இராமகிருட்டிணன் நன்றி

தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களை இந்துக்கள் என்று நம்பினாலும், இந்தியாவில் அவர்களுக்கு குடியுரிமை இல்லை என்ற நிலைப்பாட்டை இந்துக்களுக்கான கட்சி என்று சொல்லிக் கொள்ளும் பாஜக கொண்டிருப்பதை தந்தை பெரியார் திராவிட கழகம் வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ளது.


கோவை: தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளாவது, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், திபெத், போன்ற வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படும் என்று பாஜக நிறைவேற்றும் சட்டம் அந்த நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம்களுக்கும், இலங்கையில் இருந்து வரும் தமிழ் இந்துக்களுக்கும் இந்தியாவில் குடியுரிமை இல்லை என்று புதிய குடியுரிமை திருத்த சட்டம் சொல்கிறது.

இலங்கைக்கு சென்று ஈழத் தமிழர்கள் வாழக்கூடிய பகுதிகளில் வீடு கட்டித் தருகிறோம், சாலை அமைத்து தருகிறோம், அவர்களுக்கு புனரமைப்பு பணிகளை செய்து தருகிறோம் என்று நாடகம் நடத்தும் மோடியின் பாஜக அரசு அதே ஈழத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் குடியுரிமை இல்லை என்று அறிவிக்கின்றது.

கிறிஸ்துவ நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து செல்லும் இந்து மதத்தை ஏற்றுக் கொண்டவர்கள் பார்ப்பனர்கள். அந்த நாடுகளின் குடியுரிமை பெற்று பல ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கிறிஸ்துவ நாடுகளில் குடியேறிய பிழைப்புக்காக சென்ற பார்ப்பனர்கள் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஆகவும், இங்கிலாந்து நாட்டின் பிரதமராகவும் கிறிஸ்தவ நாடுகள் அனுமதித்திருக்கிறது. ஆனால் தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களை இந்துக்கள் என்று நம்பினாலும், இந்தியாவில் அவர்களுக்கு குடியுரிமை இல்லை என்ற நிலைப்பாட்டை இந்துக்களுக்கான கட்சி என்று சொல்லிக் கொள்ளும் பாஜக கொண்டிருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...