குடியரசுத் தலைவர் உரைக்கு திருத்தங்கள் கோரி பி.ஆர். நடராஜன் எம்பி நோட்டீஸ் தாக்கல்

குடியரசுத் தலைவர் உரையில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதன் காரணமாக அதிகரித்துவரும் வேலையின்மை, பல லட்சக்கணக்கான வேலைகள் இழப்பு குறித்து குறிப்பிடத் தவறியதற்கு வருந்துகிறேன் என்று பி.ஆர். நடராஜன் எம்பி தெரிவித்துள்ளார்.


கோவை: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, சில திருத்தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்கியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இதன்மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர், பி.ஆர். நடராஜன், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சில திருத்தங்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளார்.

அதன் விவரங்கள் வருமாறு: குடியரசுத் தலைவர் உரையின் இறுதியில் கீழ்க்கண்டதைச் சேர்த்திட வேண்டும். இந்த உரையில் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்துவதன் காரணமாக அதிகரித்துவரும் வேலையின்மை, பல லட்சக்கணக்கான வேலைகள் இழப்பு குறித்து குறிப்பிடத் தவறியதற்கு வருந்துகிறேன்.

“விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த, அதிலும் குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்த அரசு தவறிவிட்டது என்பதைக் குறிப்பிடவில்லை என்பதற்காக வருந்துகிறேன்.”

“இந்தியப் பொருளாதாரம் ஆழமான மந்தநிலையை நோக்கி சென்றுகொண்டிருப்பது பற்றி ஒன்றும் குறிப்பிடப்படாததற்கு வருந்துகிறேன்.” “மணிப்பூர் பிரச்சனையைக் கட்டுப்படுத்திட டபுள் என்ஜின் அரசு முற்றிலுமாகத் தவறிவிட்டது என்பது குறிப்பிடப்படாததற்காக வருந்துகிறேன்.”

“கூட்டாட்சித் தத்துவம் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது குறித்தும், மாநில அரசாங்கங்கள் மீது அரசமைப்புச்சட்டப் பங்கினை அரித்துவீழ்த்தும் விதத்தில் ஆளுநர்களின் மாளிகைகள் பயன்படுத்துவது அதிகரித்து இருப்பது குறித்தும், அதிகாரங்களை மையத்தில் குவிப்பதற்கான விருப்பம் அதிகரித்து வருவது குறித்தும் எதுவும் குறிப்பிடப்படாததற்கு வருந்துகிறேன்.” இவ்வாறு பி.ஆர். நடராஜன் அந்த நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...