கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள லாவண்யா ஜுவல்லரிக்கு சொந்தமான ரூ.34.11 கோடி சொத்துக்கள் முடக்கம்

பண மோசடி தொடர்பாக லாவண்யா ஜுவல்லரி நகைக்கடை மீது, ஏற்கனவே சிபிஐ அதிகாரிகள் சொத்துக்களை முடக்கி வைக்க நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறையினரும் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.


கோவை: கோவை ஒப்பணக்கார வீதியில் லாவண்யா ஜுவல்லரி என்ற தங்க நகை கடை உள்ளது. இங்கு ஏலச்சீட்டு உள்ளிட்ட பல்வேறு வகையில் மக்களின் பணத்தை வாங்கி மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்த நகைக்கடை மீது மோசடி வழக்கு பதிவானது தெரியவந்தது.

இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். தற்போது 65 கோடி ரூபாய் மோசடி நடந்ததாகவும், பல்வேறு மோசடிகளில் நகை கடை மற்றும் அதன் சகோதர நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரிகளும் இந்த நகைக்கடையை மோசடி தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின் அடிப்படையில் நகைக்கடை பெயரில் இருந்த ரூபாய் 34.11 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை முடக்கி வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஒரு குடியிருப்பு இடம், 4 விலை நிலம், ஒரு அடுக்குமாடி வீடு என சென்னை, கோவையில் உள்ள சொத்துக்களை அமலாக்கத் துறையினர் முடக்கி வைத்துள்ளனர். நகைக்கடையின் மீது முறையற்ற வகையிலான பணமோசடி பி.எம்.எல்.ஏ வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே சிபிஐ அதிகாரிகள் சொத்துக்களை முடக்கி வைக்க நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறையினரும் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில் இறங்கி இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...