நடிகர் விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பு – கோவையில் பட்டாசு வெடித்து நிர்வாகிகள் கொண்டாட்டம்

கணபதி சக்தி சாலையில் உள்ள கோவை வடக்கு மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு, வடக்கு மாவட்ட தலைவர் சம்பத் குமார் தலைமையில் நிர்வாகிகள் பூஜை செய்து, கேக் வெட்டி, பட்டாசு வெடித்து மேளம் தாளங்கள் முழங்க பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


கோவை: நடிகர் விஜய் மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தை நடத்தி பல்வேறு உதவிகளை செய்து வந்தார். இந்த நிலையில் விஜய் இன்று கட்சியின் பெயரை தமிழக வெற்றி கழகம் என அறிவித்தார். இதனை தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடினார்.

இதன் ஒரு பகுதியாக இன்று கோவை கணபதி சக்தி சாலையில் உள்ள கோவை வடக்கு மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு, வடக்கு மாவட்ட தலைவர் சம்பத் குமார் தலைமையில் நிர்வாகிகள் பூஜை செய்து, கேக் வெட்டி, பட்டாசு வெடித்து மேளம் தாளங்கள் முழங்க பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வடக்கு மாவட்ட தலைவர் சம்பத் குமார், இனிமேல் கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டுவதாகவும், அதிகளவில் உறுப்பினர்கள் சேர்க்கை நடத்தப்போவதாகவும் தெரிவித்தார்.



ஏற்கனவே விஜய் மக்கள் மன்றம் சார்பாக பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருவதாகவும், இனிமேல் அதனை அதிகப்படுத்தி பெரிய அளவில் மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் நலத்திட்டங்கள் செய்யப் போவதாகவும் அவர் கூறினார். ஏற்கனவே பொதுமக்களுக்கு தினமும் 100 பேருக்கு இலவசமாக உணவு வழங்கி வருவதாகவும், அந்தத் திட்டத்தை மேலும் தொடர்ந்து அதிகளவில் உணவு வழங்க திட்டமிட்டுள்ளதாக சம்பத் குமார் கூறினார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...