கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் இணையவழி பட்டப் படிப்பில் சேர்க்கை தொடக்கம்

இணையவழியில் பி.ஏ. ஆங்கிலம், பி.பி.ஏ., பி.காம்., எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், தொழில் வழிகாட்டுதல், எம்.காம். வணிகவியல், நிதி-கணக்கியல், எம்.சி.ஏ. போன்ற 11 இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுவதாக பாரதியார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் இணையவழியில் நடத்தும் பட்டப் படிப்புகளில் சேர மார்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது, பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் தொலைநிலைக் கல்வித் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு முதல் இணையவழியில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் நடத்த பல்கலைக்கழக மானியக் குழுவிடம் அனுமதி பெறப்பட்டு, சிறப்பாக நடத்தப்படுகிறது. அதன்படி, பி.ஏ. ஆங்கிலம், பி.பி.ஏ., பி.காம்., எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், தொழில் வழிகாட்டுதல், எம்.காம். வணிகவியல், நிதி-கணக்கியல், எம்.சி.ஏ. போன்ற 11 இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் பிப்ரவரி 2024 அமா்வுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது. இணையவழியில் நடத்தப்படும் அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் விண்ணப்பம் பதிவு செய்தல், கல்விக் கட்டணம், பாடம் நடத்துவது, தோ்வு, சான்றிதழ் வழங்குவது என அனைத்தும் இணையவழியிலேயே நடைபெறும். இந்த நிலையில் இணையவழி படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் பல்கலைக்கழக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...