கோவையில் கையில் குப்பையுடன் அதிமுக கவுன்சிலர்கள் நூதன போராட்டம்

கோவை மாநகரில் சேரும் குப்பைகளை அகற்ற தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என்று அதிமுக கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். னசரி அகற்ற படாத குப்பைகளுக்கு எதற்கு குப்பை வரி செலுத்தவேண்டும் என அவர்கள் கேள்வி எழுப்பினர்.


கோவை: கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரண கூட்டம் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. நிகழ்வு நடைபெறும் வளாகத்திற்கு வெளியே அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் ஷர்மிளா, ரமேஷ் மற்றும் பிரபாகரன் ஆகியோர் கையில் குப்பையுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அவர்கள், கோவை மாநகரில் சேரும் குப்பைகளை அகற்ற தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என கையில் நோட்டீஸ் வைத்து வெளியே நின்றனர். தினசரி அகற்ற படாத குப்பைகளுக்கு எதற்கு குப்பை வரி செலுத்தவேண்டும் எனவும் கேள்வி எழுப்பினர்.

மேலும் வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து வரும் துர்நாற்றத்தால் போத்தனூர், உக்கடம், குடியமுத்தூர், மதுக்கரை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை பற்றி நினைவூட்டி, அதை விரைந்து சரி செய்யவேண்டி போராடினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...