கோவையில் சின்ன வெங்காயம் விலை சரிவு – ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை

உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால்,, பெரியநாயக்கன்பாளையம், துடியலுார் வாரசந்தைகளிலும், காய்கறி சில்லறை விற்பனை நிலையங்களிலும், ஏழு கிலோ சின்ன வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


கோவை: கோவையில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளுக்கு, சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதால், சின்ன வெங்காயம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

அதன்படி கர்நாடகா மாநிலம், மைசூர் பகுதியில் இருந்தும், ஆந்திராவில் இருந்தும், கோவைக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து இருக்கும்.

இது தவிர, கோவை மாவட்டத்தில் உடுமலை, பொள்ளாச்சி உட்பட பகுதிகளில் இருந்தும் வரத்து இருக்கும். கடந்தாண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்பட்டது. வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா பகுதிகளில் வெங்காயத்தின் அறுவடை பாதிக்கப்பட்டதால், ஒரு கிலோ சின்ன வெங்காயம், 100 ரூபாய் வரை விற்பனையானது.

பின், சின்ன வெங்காயத்துக்கு மார்க்கெட்டில் கூடுதல் விலை கிடைத்ததால், விவசாயிகள் பலரும் சின்ன வெங்காயத்தை பயிரிட துவங்கினர். தற்போது, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து டன் கணக்கில், சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பெரியநாயக்கன்பாளையம், துடியலுார் வாரசந்தைகளிலும், காய்கறி சில்லறை விற்பனை நிலையங்களிலும், சின்ன வெங்காயத்தின் விலை, 100 ரூபாய்க்கு ஏழு கிலோ என நேற்று (பிப்.5) வரை விற்பனையாகி வருகிறது.

இதுகுறித்து, வியாபாரிகள் கூறுகையில், 'கர்நாடக மாநிலம், மைசூர் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் கிலோ ஐந்து ரூபாய் என விற்பனையாகிறது. அங்கிருந்து லாரியில் கொண்டு வரும் கட்டணம், ஆட்கள் கூலி உள்ளிட்ட செலவுகளுடன் மார்க்கெட்டுகளில் தற்போது கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோவையில் உள்ள மொத்த மார்க்கெட்டுகளுக்கு நாள் ஒன்றுக்கு, 100 டன் வரத்து இருந்த சின்ன வெங்காயம், தற்போது, 200 டன் என உயர்ந்துள்ளது. மைசூர் வட்டாரத்தில் இருந்து சின்ன வெங்காயத்தின் வரவு இன்னும் அதிகரிக்கும் என்ற நிலை உள்ளதால், மேலும் விலை சரியலாம். பெரிய வெங்காயத்தின் விலை தரத்தை பொறுத்து கிலோ, 15 முதல், 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...