பில்லூர் 3-வது கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் விநியோகம் வரும் 11-ல் தொடக்கம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

பில்லூர் 3வது கூட்டு குடிநீர் திட்டத்தின் சோதனை ஓட்டப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வருகிற 11ஆம் தேதி பில்லூர் 3வது கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகிக்கும் பணி தொடங்கப்பட உள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இன்று (பிப்.6) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை மாநகரில் 2035ஆம் ஆண்டுக்கான மக்கள் தேவையை கருத்தில் கொண்டு தட்டுப்பாடற்ற குடிநீர் விநியோகத்திற்கான ரூபாய்.779 கோடி மதிப்பில் பில்லூர் 3வது கூட்டு குடிநீர் திட்டம் கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பவானியாற்றை நீராதாரமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பில்லூர் 3வது திட்டத்துக்காக முருகையன் பரிசல் துறை பகுதியில் ரூபாய் 134 கோடி மதிப்பில் தலைமை நீரேற்று நிலையம் கட்டப்பட்டுள்ளது. அங்கிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதூருக்கு குடிநீர் பம்பிங் செய்யப்படுகிறது. தண்டிப்பெருமாள் புரத்தில் ரூபாய் 104. 90 கோடி மதிப்பில் 178 எம் எல் டி திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இங்கிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் கட்டன் மலைக்கு தண்ணீர் செல்கிறது. அங்கு 900 மீட்டர் தூரத்துக்கு சுங்கம் அமைக்கப்பட்டு பன்னிமடைக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு மாநகராட்சி பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.

இத்திட்டத்தில் சோதனை ஓட்டப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் தொடர்ச்சியாக வருகிற 11ஆம் தேதி பில்லூர் 3வது கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகிக்கும் பணி தொடங்கப்பட உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...