தூய்மை பணியாளர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அறிவுரை

தூய்மை பணியாளர்கள், பொது மக்களிடம் குப்பைகளை வாங்கும் பொழுது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்க வேண்டும் என்றும், அது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் தினந்தோறும் ஏற்படுத்த வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறினார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 49க்கு உட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம், எம்.ஜி.ஆர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேற்று (பிப்.8) ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களிடம் பணி குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர் தூய்மை பணியாளர்கள், பொது மக்களிடம் குப்பைகளை வாங்கும் பொழுது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்க வேண்டும் என்றும் அது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் தினந்தோறும் ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

அப்போதுதான் நாளடைவில் அவர்களும் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பார்கள். அப்போது உங்களுடைய பணி சுமையும் குறையும், குப்பைகளை கையாளுவதில் உள்ள சிரமமும் தவிர்க்கப்படும் என அறிவுரை வழங்கினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...