உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் போராட்டம்

பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறக்க உடன்படததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் உப்பாறு அணை பொறியாளர் அலுவலகம் அருகில் இருந்த செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி பாசனத் திட்டத்தில் உபரி நீரைத் திறந்துவிடக்கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விவசாயிகளை 4 முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பின்னர் கடைசி நேரத்தில் கூட்டத்தை ரத்து செய்வதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விவசாயிகள் உப்பாறு அணையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தின் போது தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் விவசாயிகளுக்கு தண்ணீர் தருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு தெரிவித்தனர்.

ஆனால் கூறியவாறு தண்ணீர் கொடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மீண்டும் 100-க்கும் மேற்பட்டோர் உப்பாறு அணையின் பொறியாளர் அலுவலகம் முன்பு 19-வது நாளாக இன்று காத்திருப்பு . போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் அருகில் இருந்த செல்போன் கோபுரத்தின் மீது ஏறி உப்பாறு பாசன விவசாயிகள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார் ஆகிய 8-பேர் தற்போது தண்ணீர் வழங்க வலியுறுத்தி செல்போன் கோபுரம் மீது அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...