ஆளுநருக்கு எதிராக மகாலிங்கபுரம் பகுதியில் திமுக மாணவரணி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் அவமதிப்பு செய்த ஆளுநரை கண்டித்து கோவை தெற்கு மாவட்ட திமுக மாணவரணி மற்றும் கல்லூரி மாணவர்கள் மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள அரசு கலை கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: சட்டசபை கூட்டத்தொடரில் நேற்று தமிழ் தாய் வாழ்த்து பாடலோடு சட்டமன்றம் தொடங்கும் என்பதால் மாநில அரசின் உரையை படிக்காமல் சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



தமிழ்நாடு சட்டமன்ற மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் அவமதிப்பு செய்தை ஆளுநரை கண்டித்து கோவை தெற்கு மாவட்ட திமுக மாணவரணி மற்றும் கல்லூரி மாணவர்கள் மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள அரசு கலை கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையை அவமதித்து வரும் ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும், தமிழ்நாடு அரசு பணத்தில் ஊதியம் பெரும் ஆளுநர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.



திடீரென மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



பின்னர் காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...