கோவையிலிருந்து காரிலேயே லண்டன் செல்லும் எக்ஸ்பிடியன்ஸ் பெண்கள்

கோவையைச் சேர்ந்த மீனாக்ஷி அரவிந்த், பொள்ளாச்சியைச் சேர்ந்த மூகாம்பிகா ரத்தினம் மற்றும் மும்பையைச் சேர்ந்த பிரியா ராஜகோபால் ஆகிய எக்ஸ்பிடியன்ஸ் பெண்கள் கோவையில் இருந்து லண்டனிற்கு காரிலேயே செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இதன் துவக்க விழாவில் கோவை எஸ்என்ஆர் குழுமம் 'எக்ஸ்பிடி 2470' கொடியினை அசைத்து துவக்கி வைத்தது. 

இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்,பி.வேலுமணி, அவினாசிலிங்கம் பல்கலைக் கழகதலைவர் பி.ஆர்.கிருஷ்ணகுமார், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் தலைவர் பிரிஜேஸ், ரூட்ஸ் குரூப் ஆப் கம்பெனி தலைவர் கே.ராமசாமி, ராமகிருஷ்ணா மற்றும் எஸ்என்ஆர் மேலாண்மை அரங்காவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.



இதனைத்தொடர்ந்து, இப்பயணத்தை மேற்கொள்ளும் மூன்று பெண்களுக்கும், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும், எக்ஸ்பிடியன்ஸ் குழுவில் இருந்து இருசக்கர வாகன ஓட்டுநர்கள் எக்ஸ்பிடியன்ஸ் பெண்களை வழியனுப்பும் விதமாக பெருந்துரை வரை உடன் செல்லவுள்ளனர்.

அந்த பெண்கள், இந்தியா சுதந்திரம் பெற்று 70 வருடங்கள் நிரைவுபெற்றதின் நினைவாக 70 நாட்களில் 24 நாடுகளை கடக்கவுள்ளனர். மேலும், ரோட்டரி இந்தியன் லிட்ரசி மிஷன் சார்பில் அனைவருக்கும் கல்வி திட்டத்தினையும் முன்வைத்து இப்யணத்தை மேற்கொள்கின்றனர்.

எக்ஸ்பிடியன்ஸ் பெண்கள் வரும் ஜுன் 5ம் தேதியன்று லண்டனை அடைய திட்டமிட்டுள்ளனர். 



இப்பயணத்தின் போது, கோவையில் இருந்து புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிடியன்ஸ் பெண்களை புதுச்சேரி ஆளுநர் கிரன்பேடி அங்கிருந்து கொடியசைத்து அனுப்பிவைக்கவுள்ளார்.

Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...