கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மேயரிடம் 54 கோரிக்கை மனுக்கள் அளிப்பு

பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்டன.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் இன்று (13.02.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், கோவை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.ச.செல்வசுரபி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.



இக்கூட்டத்தில் மேயரிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 54 நபர்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன.



இவற்றில் கிழக்கு மண்டலத்தில் 11 மனுக்களும், மேற்கு மண்டலத்தில் 4 மனுக்களும், வடக்கு மண்டலத்தில் 11 மனுக்களும், தெற்கு மண்டலத்தில் 4 மனுக்களும், மத்திய மண்டலத்தில் 15 மனுக்களும், பிரதான அலுவலகத்தில் 9 மனுக்களும் ஆகமொத்தம் 54 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.



இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார் இம்மனுக்களின் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி உதவி ஆணையர் (கணக்கு) மாணிக்கம், நகரமைப்பு அலுவலர் குமார், உதவி ஆணையர்கள் கவிதா(கிழக்கு), சந்தியா(மேற்கு), ஸ்ரீதேவி(வடக்கு), பிரேம் ஆனந்த்(தெற்கு), செந்தில்குமரன்(மத்தியம்), மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...