பெரியதடாகம் பகுதியில் உள்ள சுயம்பு நாகாளியம்மன் கோவில் புகுந்து பொருட்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

நேற்று இரவு ஒரு குட்டியுடன் வந்த தாய் யானை பெரியதடாகம் பகுதியில் உள்ள சுயம்பு நாகாளியம்மன் கோவிலின் இரும்பு கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோ உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்திச் சென்றுள்ளது. தகவல் அறிந்து அங்கு வந்த கோவை வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


கோவை: கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஆனைகட்டி மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் உணவு தேடி அவ்வப்போது மலை அடிவாரப்பகுதிகளான மாங்கரை, சின்னத்தடாகம், பெரியதடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட குடியிருப்பு மற்றும் தோட்டங்களில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேய்தப்படுத்திச் செல்வது வழக்கம்.

அதேபோல் நேற்று இரவு ஒரு குட்டியுடன் வந்த தாய் யானை பெரியதடாகம் பகுதியில் உள்ள சுயம்பு நாகாளியம்மன் கோவில் இரும்பு கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோ உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்திச் சென்றுள்ளது.

தகவல் அறிந்து அங்கு வந்த கோவை வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். காட்டு யானைகள் குடியிருப்புகளுக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...