கோவையில் நாளை முதல் சிறப்பு வரிவசூல் முகாம் – மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அறிவிப்பு

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலி இட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வருகினங்களை செலுத்த மாநகராட்சி வார்டு பகுதிகளில் பிப்ரவரி 17, 18-ஆம் தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.


கோவை: 2023-2024 நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலி இட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வருகினங்களை செலுத்த மக்களின் வசதிக்காக மாநகராட்சி வார்டு பகுதிகளில் பிப்ரவரி 17, 18-ஆம் தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெற உள்ளது.

அதன்படி, மேற்கு மண்டலத்தில் 35-வது வார்டில் லட்சுமி நகர், இடையார்பாளையம் அண்ணா நகர், செக் போஸ்ட் எதிர்புறம் விநாயகர் கோயில் வளாகம், 42வது வார்டு கோவில் மேடு வளாகம், 74வது வார்டு நாயக்கர் தோட்ட சமுதாயக்கூடம், 33வது வார்டு எஸ்.கே.ஆர்.நகர் சமுதாயக்கூடம்.

கிழக்கு மண்டலத்தில் 7 மற்றும் 8வது வார்டு பகுதிகளில் நேரு நகர் கிழக்கு, 24வது வார்டு குருசாமி நகர், 56வது வார்டு ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானம், 57வது வார்டு நெசவாளர் காலனி.

தெற்கு மண்டலத்தில் 97வது வார்டு பிள்ளையார்புரம், 100வது வார்டு மேட்டூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி. வடக்கு மண்டலத்தில் 15வது வார்டு சுப்பிரமணியம் பாளையம் அங்கன்வாடி மையம், 19வது வார்டு மணியக்காரம்பாளையம் அம்மா உணவகம், 25வது வார்டு காந்தி மாநகர் அரசு ஆரம்ப பள்ளி.

மத்திய மண்டலத்தில் 32 வது வார்டு நாராயணசாமி வீதியில் உள்ள சிறுவர் பூங்கா, 62வது வார்டு பெருமாள் கோயில் வீதி மாநகராட்சி வணிக வளாகம், 80வது வார்டு கெம்பட்டி காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, 84வது வார்டு ஜி.எம் நகரில் உள்ள தர்ஹத் இஸ்லாம் ஆரம்ப பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெற உள்ளன என கோவை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் நேற்று (பிப்.15) தெரிவித்துள்ளார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...