கோவை மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரிப்பு – நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் எபிவிபி அமைப்பு மனு

கல்லூரி மாணவர்கள் போதை பொருள் பழக்கத்தினால் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு படிப்பையும், எதிர்காலத்தையும் வீணாக்கி வருகின்றனர் என்று எபிவிபி அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை அதிகளவில் இருப்பதால் கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்து வருவதால் அகில பாரத வித்தியார்த்தி பரிசத் அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டக் கல்லூரி மாணவர் விக்னேஷ், கோவை மாவட்டத்தில் அதிகளவில் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாகவும் அதனை கல்லூரி மாணவர்கள் வாங்கி பயன்படுத்துவதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் கல்லூரி மாணவர்கள் போதை பொருள் பழக்கத்தினால் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு படிப்பையும், எதிர்காலத்தையும் வீணாக்கி வருகின்றனர்.



இதனால் காவல்துறையினர் மாணவர்கள் மீது வழக்கு தொடர்ந்து எதிர்காலத்தை வீணாக்குகின்றனர். தமிழக அரசும், கோவை மாவட்ட நிர்வாகமும் போதை பொருட்களை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் எனவும், அதற்கு முழுமையாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக அரசு மற்றும் கோவை மாவட்ட நிர்வாக அலட்சிய போக்கால் நாளுக்கு நாள் போதை பொருள் அதிக அளவில் விற்பனையாகி வருவதாகவும் குற்றம் சாட்டினர்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...