கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் 23 அடியாக சரிவு – நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்பு

கடந்த வாரத்தில் 26 அடியாக இருந்த சிறுவாணி அணையின் நீா்மட்டம், நேற்று சனிக்கிழமை நிலவரப்படி 23 அடியாக சரிந்துள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்பதால், அணையின் நீா்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: கோவை மாநகரில் 26 வார்டுகள், நகரையொட்டியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சிறுவாணி அணை பிரதான குடிநீா் ஆதாரமாக உள்ளது. 49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து நாள்தோறும் குடிநீருக்காக 10 கோடி லிட்டா் (100 எம்.எல்.டி) தண்ணீா் எடுக்கப்பட்டு வந்தது.

கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்ததால் அணையின் நீா்மட்டம் 20 அடிக்குமேல் உயராமல் காணப்பட்டது. இதனால், சிறுவாணி அணையில் இருந்து குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்ட வார்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலமாக தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், நவம்பா், டிசம்பா் மாதங்களில் வடகிழக்குப் பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீா்மட்டம் 32 அடி வரை உயா்ந்தது. அதற்கு மேல் நீா்மட்டம் உயரவில்லை. நடப்பாண்டு ஜனவரி மாத இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அணையின் நீா்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் 26 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம், சனிக்கிழமை நிலவரப்படி 23 அடியாக சரிந்துள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்பதால், அணையின் நீா்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...