கோவை ஆயுதப்படை பிரிவு தலைமை காவலருக்கு அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனரல் மைக் ஹான்கி பாராட்டு

பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்த செந்தில்குமார் மிகவும் சிறப்பாக பணியாற்றியதாக அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனரல் மைக் ஹான்கி பாராட்டி அவருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினார்.


கோவை: மும்பையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனரல் மைக் ஹான்கி கடந்த 14-ந் தேதி கோவை வந்தார். இவருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் ஆயுதப்படை பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வரும் செந்தில் குமார் என்பவர் நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனரல் மைக் ஹான்கி 3 நாட்கள் கோவையில் இருந்து விட்டு கடந்த 16- ந்தேதி மும்பை திரும்பினர். அப்போது அவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்த செந்தில்குமார் மிகவும் சிறப்பாக பணியாற்றியதாக அவர் பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினார்.

இதையடுத்து தலைமை காவலர் செந்தில் குமார் அந்த பதக்கம் மற்றும் சான்றிதழை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...