உருமாண்டம்பாளையத்தில் பாழடைந்து கிடக்கும் மயானத்தை பராமரிக்க மக்கள் கோரிக்கை

உருமாண்டம்பாளையம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளகிணர் பேரூராட்சியில் இருந்து கோயமுத்தூர் மாநகராட்சியாக மாறியது. மாநகராட்சியாக மாறியதில் இருந்து இதுவரை அங்குள்ள மயானத்தை யாரும் பாரமரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.


கோவை: கோவை உருமாண்டம்பாளையத்தில் சுமார் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக மயானம் உள்ளது. இந்த மயானத்தில் ஊருக்குள் இறக்கும் அனைத்து ஜாதியினரும் புதைக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் எரியுட்டும் மேடையும் உள்ளது. இந்தநிலையில் உருமாண்டம்பாளையம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளகிணர் பேரூராட்சியில் இருந்து கோயமுத்தூர் மாநகராட்சியாக மாறியது. மாநகராட்சியாக மாறியதில் இருந்து இதுவரை இந்த மயானத்தை யாரும் பாரமரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.



தற்போது இந்த மயானத்தில் சுமார் 5 அடிக்கும் மேலாக விஷ செடிகள், முற்கள், புல்கள் வளர்த்துள்ளன. மயானத்தின் தண்ணீர் பைப்புகள், மின்சார விளக்குகள் சரியாக வேலைகள் செய்யவில்லை. சவ வண்டிகளும் துருப்பிடித்து பயனற்ற நிலையில் உள்ளன.

இதேபோல வெள்ளகிணர் மயானமும் பாழடைந்து காணப்படுகின்றன. அங்கு ஆண்கள், பெண்களுக்கு தனிதனியாக பொதுகழிப்பிடம் இருந்தும் கழிப்பிடம் செல்லாமல் மயானத்திற்கே வருகின்றனர். மேலும் இந்த மயானம் கேட் எப்போதும் திறந்தே கிடக்கிறது. வழிப்பாதையும் சரியாக இல்லை, பல நேரங்களில் இரவு நேரத்தில் தான் இறப்பவர்களை புதைக்க கொண்டுவருகின்றனர். இங்கு பாம்பு, பல்லிகள் அதிகம் சுற்றுகின்றன. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சியினர் உரிய நடவடிக்கை எடுத்து இதுபோல உள்ள அனைத்து மயானங்களையும் பராமரிக்க வேண்டும் என்று ஊர்பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...